Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்:daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம்
www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :20.03.09
ஊதிய உயர்வு ,பணி வரன் முறை கோரி டாக்டர்களின் கருத் தரங்கம்.வரும் ஞாயிறு (மார்ச்-22) அன்று காலை திருச்சியில் நடைபெறுகிறது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்-22,ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருச்சி ஓட்டல் கவிதா மினிஹாலில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. டாக்டர்கள் முஜிபூர் ரஹ்மான்,ஜெயமுரளி, மலைத்துரை முன்னிலை வகிக்கின்றனர்.மாநில செயலாளர் ஆர்.சுந்தர் வரவேற்புரையாற்றுகிறார்.

மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத் ,பொருளாளர் டாக்டர் தி.மோகன்,மாநில நிர்வாகிகள் டாக்டர்கள் கு.முத்துக்குமார்,பி.துரை, அருள்நம்பி, திருவாரூர் சந்திரசேகர்,சிவக்குமரன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றுகின்றனர்.இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற் கின்றனர்.

முக்கிய கோரிக்கைகள்

1.தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கும்,மொபைல் கிளினிக்குகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கும்,உடனடியாக டி.என். பி.எஸ்.சி சிறப்புத் தேர்வை நடத்தி பணிவரன்முறை வழங்கிட வேண்டும்.

2.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து பணி நிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன் முறை வழங்கிட வேண்டும்.

3.மத்திய அரசுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கு ஊதியம், பதவி உயர்வு வழங்குவதோடு, விருப்ப ஓய்வுபெற விரும்பும் மருத்துவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்கிட வேண்டும்.

4.டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்ற விதி முறையை நீக்கிவிட்டு,எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்க ளுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.

5.நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய் பளிக்க வேண்டும்.

6.மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ,ரயில்வே உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

7.எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்வுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்வதோடு பயிற்சி மருத்துவர்கள்- பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.

8.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு(ALL INDIA QUOTA) முறையை ரத்து செய்திட வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத் துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிடவேண்டும்.

9.பஞ்சாயத் யூனியன் மருத்துவமனைகளில் பணிபுரிந்து அரசு மருத்துவர்களானவர்களுக்கு பஞ்சாயத் யூனியன் மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்த நாள்முதல் சி.எம்.எல் சீனியாரிட்டி வழங்கிடவேண்டும்.

10.இலங்கையில் போரை நிறுத்திடவும், பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers