Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

தேதி :28.11.08

இதழ்-செய்தி

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம்-சமூக நீதிக்கு பேரிழப்பு.


இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.


முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம் அடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்டோர் உரிமைகளுக்காகவும் அவர் ஆற்றியபணி சிறப்பானது.மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 27 விழுகாடு இட ஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுத்ததினால் ஆட்சியை இழந்த போராளி.மதச்சார்பின்மை,ஜனநாயகம் காத்திட உறுதியுடன் செயல்பட்டவர்.அவரது மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பாகும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது அஞ்சலி யையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்






DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்









DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்






DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :23.11.08

இதழ்-செய்தி


முது நிலை மருத்துவக்கல்வி வாய்ப்புக் கோரி சென்னையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்  விடுத்துள்ள இதழ்ச் செய்தி.


அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1500 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ 8000 தொகுப்பூதியத்தில் மாரச் 2005 முதல் பணியாற்றி வந்தனர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக அவர்கள் தி.மு.க அரசால் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.மூன்று ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிமுடித்த மருத்துவர்கள் அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என அரசு விதிமுறை உள்ளது.பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட வில்லை. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய காலம் அரசுப்பணியாக எடுத்துக் கொள்ளப்பட வில்லை.எனவே 3 ஆண்டுகள் அரசுப் பணியை முடித்திருந்த போதிலும் இவர்களால் அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில முடியவில்லை.இது அம் மருத்துவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவர்கள் அரசுப்பணியில் விரும்பி சேர்வதில்லை .நீண்ட காலமாக ஏராளமான பணியிடங்கள் காலியாக இருந்தன.இக்காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பல சலுகைகளை வழங்கியது.அம்மாவட்டத்தில் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் சேவை முடித்திருந்தாலே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்றும்,நுழைவுத் தேர்வில் கூடுதலாக ஆண்டொன்றிற்கு இரண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.இதனால் நீலகிரி மாவட்டத்தில் காலிப்பணி இடங்கள் அனைத்தும் நிரம்பின. ஆனால் இம் மருத்து வர்கள் அனைவரும்  தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட் டுள்ளனர் .அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வு வைத்து இதுவரை பணிவரன்முறை வழங்கப்படவில்லை.எனவே 2 ஆண்டு பணி முடித்த நீலகிரி மாவட்ட டாக்டர்களும் முதுநிலை மருத்துவக்கல்வி பயில முடியாத நிலை உள்ளது.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களும் , நீலகிரி மாவட்ட தற்காலிக டாக்டர்களும் அரசு ஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்திட வேண்டும்.அதற்கேற்ற வகையில் டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில்  முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டும். சீமான் மற்றும் பீமான் மருத்துவ மையங்களில் பணிபுரியும் முது நிலை மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி உடனடியாக பணிநிரந்தரம் வழங்கிடவேண்டும் .மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில்  23.11.08 ஞாயிறு காலை சென்னை மெமோரியல் ஹால் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கப் பொருளாளர்  டாக்டர் தி.மோகன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் துவக்கிவைத்தார். டாக்டர்கள் கு.முத்துக்குமார், பி.துரை,ஆர்.சுந்தர்,அருள்நம்பி,சிவக்குமரன்,.திருவாரூர் வி.எஸ்.டி.சந்திரசேகர்,தர்மபுரி சரவணன்,புதுகை முஜிபூர் ரஹ்மான், கமல்ராஜ்.இளஞ்செழியன்,இர்ஷாத், குணாளன், நடராஜன்,வாணி,வசுமதி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற் றினர்.பொது ச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைத்தார்.இதில் ஏராளமான டாக் டர்கள் பங்கேற்றனர்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Target Your PG Seat: Special TNPSC 2007 (for Contract Medical Consultants and Contract Medical Officers Selection List Released. See www.targetpg.net for more information


















DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
பத்திரிகை செய்தி

தேதி :19.11.08

முது நிலை மருத்துவக்கல்வி வாய்ப்புக் கோரி சென்னையில் வரும் ஞாயிறு அன்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்.


இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் அரசு ஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்திட வலியுறுத்தியும், அதற்கேற்ப டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தியும், சீமான் மற்றும் பீமான் மையங்களில் பணிபுரியும் முது நிலை மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் உடனடியாக பணிநிரந்தரம் வழங்கிடக்கோரியும் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 23.11.08 ஞாயிறு காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..

சங்கத் தலைவர் டாக்டர் டி.அறம் தலைமை தாங்குகிறார். சி.பி.ஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் துவக்கிவைக்கிறார், டாக்டர்கள் கு.முத்துக்குமார், தி.மோகன்,பி.துரை,ஆர்.சுந்தர்,அருள்நம்பி,சிவக்குமரன்,.திருவாரூர் சந்திரசேகர்,தர்மபுரி சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றுகின்றனர்.பொதுச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைக்கிறார்.இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற்பர்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்




DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :09.11.08
இதழ்-செய்தி
அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும். தூத்துக்குடியில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். 
இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் விடப்பட்டுள்ள இதழ்ச் செய்தி.

மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஏழைமாணவர்களுக்கு நிதிவழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர் எம்.சுரேஷ்குமார் தலைமையில் ஹோட்டல் சித்திராவில் 9.11.08 காலை நடைபெற்றது..டாக்டர் க.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் எஸ். உமா எம்.டி மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந் திரநாத் ,மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் மாநில செயலாளர் டாக்டர் பி.துரை, நெல்லை மாவட்டச் செயலாளர் டாக்டர் என்.பசுபதி,பொருளாளர் டாக்டர் சண்முகராஜா, துணைத்தலைவர் அருள்ராஜன் டாக்டர்கள் கருப்பசாமி ,முருகதாசன் ,சந்தானமாரி, முத்துசாமி,சிவப்பிரகாஷ், உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பர்வதராணி சார்பில் ஆண்டுதோறும் ஒரு ஏழை மாணவருக்கான கட்டணங்கள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. .டாக்டர்கீதாராணி நன்றி நவின்றார்.கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் மருத்தவக்கல்வியை வேறு மாநிலங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது.
  2. இத்திட்டத்தை விரிவு படுத்தி இதரபிற்படுத்தப்பட்டோருக்கும், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கும்,அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களக்கும் உதவ வேண்டும்.
  3. பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களும், தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் நீலகிரி மாவட்டத்தில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும், முது நிலை மருத்துவப் படிப்பிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  4. இதற்கேற்ப டி.என்.பி. எஸ்.சி மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத் துவம் பயிலலாம் என்ற விதி முறையை நீக்கவேண்டும். 
  5. தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும்,பல்டாக்டர்களுக்கும் டி.என்.பி.எஸ்.ஸி சிறப்புத் தேர் வு நடத்தி பணியில் சேர்ந்த நாள்முதல் பணி வரன்முறை வழங்க வேண்டும். 
  6. தாய்-சேய் நல வாழ்வுத்திட்டம்,காசநோய் தடுப்புத்திட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் போன்றவற்றில் தற்காலிக அடிப்படையில் பணி யாற்றி வரும் டாக்டர்களுக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.
  7. மருத்துவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை கர்நாடகாவிற்கு இணையாக உயர்த்த வேண்டும்.
  8. அரியலூரில் டாக்டர்களை தாக்கிய நபர்களை உடன் கைது செய்யவேண்டும். 
  9. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும்.மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபை உரியநடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(டாக்டர் த.அறம்)
தலைவர் ,டி.ஏ.எஸ்.ஈ






Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers