Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JTS8yMDA5LzAyLzI4I0FyMDE3MDU=&Mode=HTML&Locale=english-skin-custom

New Delhi: Taking a stand against the proposed compulsory rural posting of doctors, the Medical Council of India (MCI) on Friday said it was not feasible as it would lengthen the existing medical education course.

“That is not possible,’’ MCI chairperson Ketan Desai told a newsmen here. Desai said the MCI has already taken steps to increase the number of doctors in rural areas by helping to open more colleges there. “Of the 113 colleges which have come up since 1997, 101 have been set up in rural areas. This has been done by making it mandatory for all new colleges to have a minimum of 25 acres of land which is not possible in areas like Delhi and Mumbai,’’ he said.

Opposing the rural posting, he said a doctor needs at least 12 years to complete his training. “So it is not feasible to increase it by one more year,’’ he said. The health minister has proposed a compulsory rural posting for doctors after completing MBBS and before taking up post-graduation to address the shortage of heathcare workers in rural areas. AGENCIES


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Edit Posts(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: ™: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :25.2.09

பயிற்சி மருத்துவர்கள் - முதுநிலை மருத்துவ மாணவர்களின்
பயிற்சிக்கால ஊதியத்தை உயர்த்திடுக.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக்கால ஊதியம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகக் குறைவாக உள்ளது.இதை உயர்த்திட வேண்டும் என நீண்ட காலமாக கோரிவந்த போதிலும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்,பயிற்சிகால ஊதியத்தை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி 24.2.09 அன்று தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள்- பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.எனவே, உடனடியாக பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிகால ஊதியத்தை உயர்த்திட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,

(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுசெயலாளர்,
டி.ஏ.எஸ்.ஈ

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்:daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி தேதி :22.2.09

தற்காலிக மருத்துவர்களுக்கு உடனடியாக சிறப்பு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி பணிவரன்முறை வழங்கிடுக.

டாக்டர்கள் சங்கப் பொதுக்குழு வலியுறுத்தல்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிறு (22.02.09) பிற்பகல் சென்னை எழும்பூர் பாந்தியன்
சாலையில் உள்ள இக்சா-ஜெ.ஜெ -அரங்கில் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமையில் நடைபெற்றது. வேலை அறிக்கையை மாநிலப் பொ துச் செயலாளர் டாக்டர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத்தும்,நிதிநிலை அறிக்கையை பொருளாளர் டாக்டர் தி.மோகனும் தாக்கல் செய்தனர். மாநில நிர்வாகிகள் டாக்டர்.பி.துரை,ஆர்.சுந்தர்,ஏ.அருள்நம்பி,கு.முத்துக்குமார், வி.ஜீவானந்தம், ஏ.ஆர். சாந்தி,சிவக்குமரன்,சுகன்யா,திருவாரூர் சந்திரசேகர் உள்ளிட்டோர் தீர்மா னங்களை முன்மொழிந்து உரையாற்றினர்.இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து மருத்துவர்களும்,மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

1.தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வை நடத்தி பணிவரன்முறை வழங்கிட வேண்டும்.

2.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வு மூலம் பணி நிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன் முறை வழங்கு!

3.மத்திய அரசுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்குவதோடு,விருப்ப ஓய்வு பெற விரும்பும் மருத்துவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்கிட வேண்டும்.

4.டாக்டர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் பணிநியமனம் செய்வதை கை விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்திடவேண்டும்.இதற்கென தனி வாரியம் அமைத்திடவேண்டும்.

5.டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப் பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்ற விதிமுறையை நீக்கி விட்டு , எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்கவேண்டும்.

6.நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர் களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.

7.மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவக்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

8.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதோடு, ஆன் -லைன் கவுன்சிலிங் வசதியை ஏற்படுத்திட வேண்டும்.நுழைவுத் தேர்வு முடிந்த உடன் விடைத்தாளின் கார்பன் நகலை தேர்வு எழுதியவருக்கு வழங்குவதோடு, அன்று மாலையே இணையதளத்தில் சரியான விடைகள் அடங்கிய ஆன்சர் கீயை (Answer key) வெளியிட வேண்டும்.

9.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குப் பிறகு கட்டாயச் சேவையில் ஈடுபடுத்துவதை கைவிடுவதோடு,மத்திய அரசின் கட்டாய சேவை திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது.நிரந்தர அடிப்படையில் மட்டுமே டாக்டர்களை பணி நியமனம் செய்திட வேண்டும்.

10.எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்வுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்வதோடு,பயிற்சி மருத்துவர்கள் , பட்டய மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.

11.எம்.எம்.சி,கே.எம்.சி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவியரின் விடுதிகளின் வசதியை மேம்படுத்திட வேண்டும்.

12.தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்டணங்களை ரத்து செய்திட வேண்டும்.

13.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.

14.மருத்துவ மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் லேப்-டாப் வழங்குவதோடு,மருத்துவக் கல்லூரிகளின் நூல்நிலையங்கள் அனைத்திலும் இன்டர்நெட் வசதி செய்துகொடுத்திட வேண்டும்.

15.நோயாளிகள் நலச்சங்கங்களுக்கு நிதி திரட்ட டாக்டர்களை கட்டாயப்படுத்துவதை கைவிடவேண்டும்.

16.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்குவதோடு மொபைல் கிளினிக் மருத்துவ ஊர்திகளுக்கு நிரந்தர ஓட்டுனர்களை யும்,மருத்துவ ஊழியர்களையும் நியமிக்கவேண்டும்.போதிய எரிபொருளையும் வாகனங்களுக்கு வழங்கிட வேண்டும்.

17.இரத்த சேமிப்பு வசதி,ஆம்புலன்ஸ் வசதி போன்ற வசதிகளும், மகப் பேறு-மயக்க மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. அவசர அறுவை சிகிச்சைக்கு வசதிகளற்ற இத்தகு நிலையங்களில் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால்,பேறுகாலத்தில் தாய் மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பது அதிகரிக்கிறது.கர்ப்பப்பை கிழிதல்,இரங்கிவிடுதல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன. மூளை-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதை கட்டாயப்படுத்தும் போக்கை கைவிடவேண்டும்.

18.எல்லா வசதிகளும் உள்ள பாதுகாப்பான மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்கப்படுத்துவதோடு,பிரசவம் பார்த்துக் கொள்வதற்கான மருத்துவனைகளை தெரிவு செய்திட தாய்மார்களுக்கு உள்ள உரிமையை பறிக்கக் கூடாது.

19.தமிழக அரசின் பட்ஜெட்டில் ஆண்டு வறுமானம் 24 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள 1 கோடி குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை பயனடையும் மருத்துவக் காப்பீடு திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 200 கோடி வரும் ஆண்டில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா,கனடா,சிலி,பெரு போன்ற நாடுகளில் தோல்வியடைந்த இத்திட்டத்தை உலக வங்கி தற்பொழுது மத்திய,மாநில அரசுகளைப் பயன்படுத்தி நம் மீதும் திணிக்கிறது.இதனால் உயிர்காக்கும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை படிப்படியாக தனியார் மயமாகிவிடும்.இத்திட்டத்தின் மூலம் சாதாரண மக்கள் 1.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் இதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை செய்து கொள்ள முடியாது.தனியார் மருத்துவமனைகளில் உள்ள அதிகமான கட்டணங்களும், காப்பீட்டு நிறுவனங்கள் போடும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ஏழை மக்களுக்கு பெரும் தடையாக அமையும். சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் உதவுவதில்லை.எனவே, ஏழை மக்களை தனியார் மருத்துவமனைகளை நோக்கி இழுக்கும் தூண்டில் புழுபோல்தான் இத்திட்டம் அமையும்.தனியார் மருத்துவமனைகளும், நலக்காப்பீட்டு நிறுவனங்களுமே இத்திட்டத்தால் லாபமடையும்.எனவே இத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
நலக்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உயிர்காக்கும் உயர் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏழை மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அரசே நேரடியாக உதவலாம்.இடைத்தரகர்களின் முறைகேடுகளை இதன் மூலம் தவிர்க்க லாம்.மேலும் ஆண்டுதோறும் இதற்காக செலவழிக்கூடிய நிதியை கொண்டே ஒவ்வொரு ஆண்டும் ஓர் உயர் சிறப்பு மருத்துவ மனையை அரசே தொடங்கிட முடியும்.அதில் இலவசமாக ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங் கிட முடியும்.ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துக்கல்லூரி மருத்துவமனை களையும் தரம் உயர்த்தலாம்,முழுமையாகப் பயன்படுத்தலாம்.அமைப்புசாரா தொழிலார்களுக்கு அரசே கட்டணம் செலுத்தி ஈ.எஸ்.ஐ திட்டத்தை நடை முறைப் படுத்தலாம்.அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளையும், சிகிச்சைக ளையும் இலவசமாக்கலாம்.கட்டண வார்டுகளை ரத்து செய்து அந்தப் படுக்கை
களையும் ஏழை நோயாளிகளுக்கு வழங்கலாம்.இவற்றையெல்லாம் செய்யாமல் ஏழைமக்களுக்கு நலக்காப்பீடு என்பது ஒரு ஏமாற்று வேலை. தனியார் மருத்துவமனைகளையும்,தனியார் நலக்காப்பீட்டு நிறுவனங்களையும் ஊக்கப் படுத்தும் வேலை என்பது தான் உண்மை.எனவே இத்திட்டத்தை கைவிட்டு மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என இப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

20.இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் கட்டாயச் சேவைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதோடு, அரசுமருத்துவமனைகளை தனியார்மயமாக்குவதையும் ,வியாபாரமயமாக்குவதையும் கைவிட வேண்டும்.

21.மூடப்பட்டுள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை மீண்டும் திறந்திடவேண்டும்.

22.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு (ALL INDIA QUOTA) முறையை ரத்து செய்திட வேண்டும். இம் முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

23.இலங்கையில் போரை நிறுத்திடவும்,பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) - Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு.
#41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: ™: daseindia@gmail.com www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :15.2.09
இலங்கை தமிழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு.இலங்கை ராணுவத்தின் கொடுஞ்செயல்.

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கண்டனம்.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறி வவுனியாவிற்கு வரும் கருவுற்றிருக்கும் தமிழ் தாய்மார்களை நிர்ப்பந்தப்படுத்தி கருக்கலைப்புக்கு உட்படுத்துமாறு இலங்கை ராணுவ உயர் அதிகாரிகள் வவுனியா மருத்து மனை உயர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.சிங்கள மொழி படிக்கத் தெரியாத தமிழ்ப் பெண்களிடம் சிங்கள மொழியில் உள்ள ஒப்புதல் படிவங்கள் மூலம் ஏமாற்றி அனுமதி பெற்று கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.இலங்கை ராணுவத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வெறிச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலக நல நிறுவனம் இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.குற்றவாளிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படவேண்டும்.

பலர் உயிர் இழக்க காரணமான முதியோர் இல்லம் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இப்படிக்கு

(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :16.2.09

மத்திய இடைக்கால பட்ஜட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை புறக்கணிப்பு.பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட வேண்டிய பத்து விழுக்காடு கூடுதல்நிதி கூட ஒதுக்கப்படவில்லை.கடந்த 2008-09 ஆண்டு தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற்கு 12 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அது முந் தைய ஆண்டைவிட (2007-08) 15 விழக்காடு அதிகம்.இந்த இடைக் கால பட்ஜட்டில் தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற்கு 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே கூடுத லாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ராணுவத்திற்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால்,இவ்வாண்டு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது 34.18 விழுக்காடு அதிகரிக்கப் பட்டுள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்படவேண்டிய நிதி ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இது வன் மையாக கண்டிக்கத்தக்கது.
மும்பை பயகரவாத நிகழ்வை காரணம் காட்டி இவ்வாறு ராணுவத் திற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என் றாலும்,ராணுவத்திற்கான நிதியை அதிகப்படுத்துவதாலும்,ராணுவத்தைப் பலப்படுத்துவதாலும் மட்டுமே இந்தியாவின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திவிட முடியாது.பாபர் மசூதி இடிப்பு,மதச்சார்பின்மையை காக்கத் தவறியது,முஸ்லீம்களுக்கும் எதிரான நாடு போல் இந்தியாவை மாற்றியது,பாரம்பரியமான அணிசேரா வெளி உறவுக் கொள்கையை கை விட்டது , இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றியது போன்றவை இந்தியாவை பல்வேறு அமைப்புகளும்,நாடுகளும் எதிரியாக கருதும் நிலையை ஏற்டுத்தியுள்ளது.இதுவே இந்தியாவின் பாதுகாப்புக் கும்,ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டிற்கும் ,சமூக அமைதிக்கும் அச்சுறுத் தலாக மாறியுள்ளது.

தவறான கொள்கைகளை கைவிடாமல் ராணுவ பலத்தின் மூலம் மட்டு மே நாட்டை பாதுகாக்க நினைப்பதும் ,அதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை ராணுவத்திற்கு காவு கொடுப்பதும் வன்மையாக கண் டிக்கத்தக்கது. மக்களினின் நலவாழ்வை மேம்படுத்த பயன்பட வேண்டிய நிதி இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு ராணு வத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் கல்லாப் பெட்டிகளை அடைய விருப்பது வருத்தமளிக்கிறது.மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் ராணு வத்திற்கு அதிகமாக நிதிஒதுக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்த்திட முன்வரவேண்டும்.

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,
டி.ஏ.எஸ்.இ

INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) - Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு.
#41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்-daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org________________________________________________________________________________


________________________________________________________________________________
இதழ்ச் செய்தி
தேதி :13.2.09

பிப்ரவரி 17-மனிதச் சங்கிலியில்
மருத்துவ மாணவர்கள் -மருத்துவர்கள்
கலந்து கொள்ள வேண்டுகோள்.

இது குறித்து சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித் துள்ளதால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.போதிய மருந்துப் பொருட் களும்,மருத்துவ வசதிகளும் இன்றி தமிழர்கள் அவதிப்படுகின்றனர்.

இன்னிலையில்,மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசைக் கண்டித்தும்,போரை நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட மத்திய அரசை வலியு றுத்தியும், இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தியும், ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 17.2.09 அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியரும் ,அரசு மற்றும் தனியார் மருத்து வர்களும் பங்கேற்க வேண்டுமென சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுசெயலாளர்,ஐ.டி.பி.டி

INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) -
Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு பிரிவு.

# 41-Chavady street, Pallavaram, Chennai -43
Ph: 044 22643561, 22642790 Fax: 044 22643562 Mobile: 99406 64343 , 9444183776
email: idpd04@yahoo.com , daseindia@gmail.com , web Site: www.idpd.org

----------------------------------------------------------------------------------------------------------------
இதழ்ச் செய்தி
தேதி: 11.2.09
காதலர்களை தாக்கும் சாதிய- மதவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக.

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக.

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதிய அமைப்புமுறை நீடித்துவருகிறது.ஆதிக்க சாதியினரின் சாதி வெறியால் ஒடுக்கப்பட்ட சாதியினர் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.தீண்டாமை,சாதிய பாகுபாடு போன்றவற்றால் விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது.
பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதி, அகமணத் திருமண முறை என்ற ஒரே சாதிக்குள்ளேயே செய்யப்படும் திருமணமுறையால் நீடித்து நிலைத்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கும்,சமூக நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் பெரிய சவாலாக இன்றளவும் சாதி உள்ளது.தீண்டாமையையும் அதற்கு காரணமான சாதியையும் ஒழிப்பது காலத்தின் அவசியமாகும்.பல்வேறு முற்போக்கு அரசியல்-சமூக இயக்கங்கள் சாதி ஒழிப்பை தங்கள் லட்சியமாக கொண்டுள்ளன.தீண்டாமை -சாதி ஒழிப்பிற்கு நிலச்சீர்திருத்தம்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி -வேலைவாய்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.அதே போன்று சாதி நீடிப்பதற்குக் காரணமான அகமணத்திருமண முறைக்கு மாற்றாக கலப்புத் திருமணங்களும்,சாதிமறுப்புத் திருமணங்களும் ஊக்கப்படுத்தப்படுவது அவசியம்.

கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணங்களாகவே அமைகின்றன.பெற்றோரால் நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களில் சாதி பார்க்கப்படுவதும்,வரதட்சணை கோரப்படுவதும் மிக அதிக அளவில் உள் ளன.தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் ஐனநாயக உரிமையும் இளைய தலைமுறைக்கு ஏற்பாட்டுத் திருமணங்களில் மறுக்கப்படுகிறது. ஆரோக்கியமான எதிர்கால சந்ததியைப் பெற்றிட கலப்புத் திருமணங்களே மருத்துவ ரீதியாகவும் சிறந்தது.

ஆனால்,இத்தகைய திருமணங்களால் சாதிய -வர்ணாசிரம தர்மமுறை தகர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் பிற்போக்கு மத வெறிசக்திகள் காதல்-கலப்பு மணங்களை எதிர்க்கின்றன.காதலர்களையும் தாக்குகின்றன.
சாதியற்ற சமூகத்தை படைத்திட ,காதல்-கலப்புமணங்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.காதலர் தினத் தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என மத்திய -மாநில அரசுகளை சமாதானம் மற்றும் முன்னேற் றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது..

இப்படிக்கு

(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான
இந்திய டாக்டர்கள் சங்கம்.





DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY







டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
Email : daseindia@gmail.com, website : www.daseindia.org
________________________________________________________________________________
கட்டுரை தேதி :3.2.09
யாருக்காக மருத்துவர்களின் கட்டாய சேவை ?

தமிழக மருத்துவ மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர்.ஈழத் தமிழர் பிரச்சனையும் உச்சக்கட்டத்தில் உள்ளது. மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதுவும் நடத்தமுடியாத சூழல்.இதைப் பயன்படுத்திக் கொண்டு கட்டாயச் சேவைத் திட்டத்தை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை நயவஞ்சகமாக மீண்டும் திணிக்கிறது.

கட்டாய சேவைத் திட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.இடதுசாரிகள் ஆதரவு தந்தனர்.'மருத்துவர்கள் கிராமப்பு றங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது;ஆனால் மருத்துவப்படிப்பின் காலம் அதிகப்படுத்தப்படுவது சரியல்ல. இப்பிரச்சனையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூறும் கருத்தே எனது கருத்தும். அமைச்சர் அன்புமணி போராடும் மாணவர்களை அழைத்துப்பேசி பிரச்சணைக்கு சுமூகத் தீர்வு காணவேண்டும்' என தமிழக முதல்வர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை என்ற கண்துடைப்பு நாடகத்தை சென்னையில் அரங்கேற்றினார் அமைச்சர் அன்புமணி. 'மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உரிய தீர்வுகாணப்படும் என பேச்சுவார்த்தையின் முடிவில் வசனங்களை உதிர்த்தார்' ,அவர். மகிழ்ந்து போனார்கள் மாணவர்கள்.இவையெல்லாம் நடைபெற்றது முதல்கட்டப் போராட்டத்தில்.
அடுத்த ஒருவார காலத்திற்குள் டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்டாயசேவைத் திட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.கொதித்தெழுந்த மாணவர்கள் இரண்டாம் கட்டப் போராட்டத்தை துவங்கினர். ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மீது திரும்பியது.இம்முறை பாட்டாளி மக்கள் கட்சி நீங்கலாக அனைத்துக் கட்சியினரும் மாணவர்கள் பக்கம் நின்றனர்.அன்புமணிமட்டுமல்ல அவரது கட்சியும் தனிமைபடுத்தப்பட்டது.

இம்முறை போராட்டத்தை மழுங்கடிக்க புது வியூகத்தை வகுத்தார் அன்புமணி.மாணவர்களால் கோரப்படதா ஓர் குழுவை நியமித்தார்.இப்பிரச்ணை பற்றி கருத்தறிந்து பரிந்துரைகளை வழங்கும் என கூறப்பட்டது.டாக்டர் சாம்பசிவராவ் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவரும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையில் அமைச்சர் அன்புமணிக்குக் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகளே.அக்குழு சுதந்திரமாக.நடுநிலையாக செயல்படாது என எதிர்ப்புகள் எழுந்தன.மாணவர்கள் இக்குழுவை புறக்கணித்தனர்.சென்னையில் இக்குழுவை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர்.தமிழக முதல்வர் அளித்த உறுதி மொழியை ஏற்று மாணவர்கள் பல நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
முக்கிய நகரங்களில் மட்டும் கருத்தைக் கேட்டறிந்தது டாக்டர் சாம்பசிவராவ் குழு.பெரும்பாலோர் இத்திட்டத்திற்கு எதிராகவே கருத்துக்கூறினர்.இக்குழுவின் செயல்பாடு வெளிப்படை யுடன் இல்லை. அதன் பரிந்துரைகளும் வெளியிடப்பட வில்லை ;விவாதிக்கப்பட வில்லை.அமைச்சர் அன்புமணி என்ன செய்ய நினைத் தாரோ அதுவேதான் அக்குழுவின் பரிந்துரையாகவும் வந்திருக்கும்.இது ஊர் அறிந்த உண்மை.மற்றுமொறு நாடகம் ,அவ்வளவு தான்.

டாக்டர் சாம்பசிவராவ் குழுவின் பரிந்துரைப்படி கிராமப்புற கட்டாய சேவை கொண்டுவரப்படும் என டாக்டர் அன்பு மணி மீண்டும் அறிவித்துள்ளார்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டத் திட்டத்திற்கும் இப்பொழுது டாக்டர் சாம்பசிவராவ் குழுவின் பரிந்து ரைப்படி அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

முந்தைய திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.மருத்துவக் கவுன்சிலிலும் பதிவு செய்யமுடியாது.தற்காலிகப் பதிவின் மூலம் ஓராண்டு கட்டாய சேவை செய்ய வேண்டும். அதாவது பயிற்சி மருத்துவராக (ஹவுஸ் சர்ஜனாக) ஓர் ஆண்டிற்குப்பதிலாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டு மென்பதுதான்.இப்பொழுது உள்ள திட்டத்தின் படி எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். மருத்துவக் கவுன்சி லிலும் பதிவு செய்து கொண்டு மருத்துவராக தொழில் செய்யலாம்.ஆனால் முது நிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க வேண்டுமெனில் ஓராண்டு கட்டாய சேவை முடிதுள்ளதாக சான்றிதழ் வழங்க வேண்டும்.நேரடி திணிப்புக்குப்பதில் மறைமுகத் திணிப்பு , அவ்வளவுதான்.

தொழில் போட்டியும், மருத்துவ தொழில் நுட்பமும் மிகுந்த இன்றைய காலக் கட்டத்தில் வெறும் எம்,பி.பி.எஸ் படிப்பு மட்டுமே போதாது. முதுநிலை மருத்துவக் கல்வியும், உயர் சிறப்பு மருத்துவமும் பயில வேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது.இதைப் புரிந்து கொண்டு முதுநிலை மருத்துவக் கல்வியை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயல்கிறார்கள். மறைமுகமாக கட்டாயச் சேவையை கட்டாயப் படுத்துகிறார்கள்.இதுவும் இளம் டாக்டர்களை பாதிக்கக்கூடியதே.மருத்துவ மாணவர் களின் உணர்வுகளை அலட்சியப் படுத்தி தனது நிலையில் பிடிவாதமாக உள்ளார் டாக்டர் அன்புமணி.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டத்தின் நோக்கம் என்ன? அதில் நியாயம் உள்ளதா? அதை மாணவர்கள் எதிர்ப்பதேன்?கிராமப்புற மக்களுக்கு இத்திடம் உதவுமா? மருத்துவர்கள் இன்றி அவதிப்படும் கிராமப்புறங்களுக்கு மாற்றுதான் என்ன? மருத்துவர்கள் கிராமப்புற மக்களை புறக்கணிப்பது சரியா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டியது இத்திட்டம் கிராமப்புற சேவைத் திட்டமே அல்ல.
ஏனெனில் இத்திட்டத்தின மூலம் 4 மாதங்கள் மாவட்ட மருத்துவ மனைகளிலும் 4 மாதங்கள் வட்டார மருத்துவமனைகளிலும் ,4 மாதங்கள் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பணியாற்ற வேண்டும் .மாவட்ட, வட்டார மருத்துவமனைகள் நகர்புறங்களில்தான் உள்ளன.பல ஆரம்ப சுகாதார நிலையங்களும் நகராட்சிப் பகுகளிலேயே உள்ளன.எனவே இதை கிராமப்புற சேவை என்பது ஏமாற்று வேலை.
கிராமப்புற சேவை என்ற மக்களை கவரும் சொல்லை பயன்படுத்துவது ஒரு சிறந்த யுத்தி. கிராமப்புறங்களுக்கு டாக்டர்கள் போக மறுக்கிறார்கள் ,எனவே தான் கட்டாய கிராமப்புற சேவை என எளிதாக பிரச்சாரம் செய்யலாம். இத்திட்டத்தை எதிர்ப்வர்களை கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் என எளிதாக முத்திரை குத்திவிடலாம். இந்த வகையில் இந்த பெயர் ஓரளவிற்கு இந்தத் திட்டத்தை திணிக்க பயன்பட்டுள்ளது.

கட்டாய சேவை என்பது உண்மையில் ஒரு சேவையுமல்ல.சேவை என்பது தானாக முன்வந்து சுய விருப்பத்தின் பேரில் செய்வது.உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்தால் சேவைத்துறைகளில் வர்த்தகம் செய்வதற்கான பொது ஒப்பந்தத்தில்-காட்ஸ் (General Agreement on Trade in Services) கையெழுத்திட்டுள்ளது இந்தியா. இதன் மூலம் கல்வி,மருத்துவம்,குடிநீர் விநியோகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சேவைத்துறைகளை வியாபாரமாக்கிவிட்டது. மருத்துவத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரச் சந்தையாக்கிவிட்டு சேவை என்ற வார்த்தையை சொல்வதே கேவலமாக உள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஏராளமாக தொடங்க அனுமதித்துவிட்டு ,கல்வியை வியாபாராமாக்கிவிட்டு,சேவையைப்பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.மருத்துவர்களிடம் சேவை மனப்பான்மை குறைந்ததற்கும் அரசுதான் காரணம்.

எனவே,இத்திட்டத்தை கட்டாய சேவை என்பதைவிட குறைந்த ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கட்டாயப்படுத்தி வாங்கப்படும் வேலை என்பதுதான் சரி.உழைப்புச் சுரண்டல் என்பதுதான சரி. இத்திட்டம் மூலம் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் இன்றைய நிலையில் படித்து முடித்து வெளிவரக்கூடிய 32 ஆயிரம் டாக்டர்கள் ஓர் ஆண்டு காலத்திற்கு சுழற்சி அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்வார்கள். மாதம் தோறும் அவர்களுக்கு வெறும் ரூபாய் 8 ஆயிரம் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படும். அவர்கள் ஓராண்டு பணியை முடித்தவுடன் அடுத்த ஜூனியர் பேட்ச் மருத்துவர்கள் அந்த இடத்திற்கு பணிபுரிய வந்துவிடு வார்கள்.

மருத்துவக்கல்லூரிகளும், ஆண்டுதோறும் படித்து முடித்து வெளிவரக்கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்பொழுது கட்டாய சேவையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் அரசுப்பணியிடங்கள் நிரந்தரமாக ஒழித்துக் கட்டப்பட்டுவிடும். கட்டாய சேவை மூலம் தற்காலிக அடிப்படையில் 32 ஆயிரம் மருத்துவர்களை நியமிப்பதால் ஆண்டு தோறும் மத்திய-மாநில அரசுகளுக்கு பல நூறுகோடி ரூபாய் மிச்சம்.நிரந்தர மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய வேறு எந்த உரிமைகளோ, அலவன்ஸ்களோ, ஓய்வுதியமோ வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் மூலமும் அரசுகளுக்கு மேலும் பல கோடி ரூபாய் மிச்சம்.எனவே இது மோசமான ஏமாற்றும் செயல்தானே தவிர சேவையல்ல.

உலக வங்கியின் சிந்தனைக் குழந்தைதான் இந்தத் திட்டம்.பல கோடி ரூபாய்களை நமது மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடனாக ஆண்டுதோறும் வழங்குகிறது உலக வங்கி. அந்தக் கடனை வட்டியோடு நாம் எந்த சிரமமுமின்றி திருப்பிசெலுத்த வேண்டும். அதற்காகவே இது போன்ற சிக்கன நடவடிக்கை யோசனைகளை உலக வங்கி நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கிறது.கடனைக் கொடுக்கும் பொழுதே அதை வட்டியுடன் திரும்பப் பெறுவதற்கான உத்திரவாத்ததையும் செய்து கொள்கிறது. ஆறு லட்சம் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயலாளிளை ஊதியமே இல்லாமல் மத்திய அரசு கிராமப்புறங்களில் நியமித்துள்ளது இந்த சிக்கன நடவடிக்கைக்கு மற்றொரு உதாரணமாகும்.

மருத்துவ மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்திட பல காரணங்கள் உள்ளன. இக்கட்டாய சேவைத் திட்டம் இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை முழுமையாக பாதிக்கும். இத்திட்டத்தின் மூலம் படிப்புக்காலம் மறைமுகமாக நீட்டிக்கப்படுகிறது..ஒரு முழுமையான மருத்துவ நிபுணராக 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால் ,தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர்,பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் மருத்துவக்கல்வியை படிப்பதற்கு தயங்குவர். சாதரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படிக்க பொருளாதார ரீதியிலும் சிரமப்படுவர்.திருமணம் போன்ற காரணங்களால் பெண்களை நீண்ட காலப் படிப்பான மருத்துவக் கல்வியில் சேர்த்திட பெற்றோர் தயங்குவர். இதனால் வசதி படைத்த ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக்கல்வி மாறிவிடும்.இது சமூக நீதிக்கும் பெண்களின் உயர்கல்விக்கும் எதிரானதாகும்.எனவே தான் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.

முதுநிலை மருத்துவக்கல்வி முடித்தவுடன் 3 ஆண்டுகள் கட்டாய சேவை செய்ய வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே தமிழகம் போன்ற பல மாநிலங்களில் நடை முறையில் உள்ளது.இந்நிலையில் எம்.பி.பி.எஸ் முடித்தவுடனும் ஓராண்டு கட் டாய சேவையை செய்ய வேண்டும் வன்பது கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும். எல்லாவகை கட்டாய சேவைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

கிராமப்புற சேவை என்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் புதிதல்ல. அரசுப்பணிக்கு தமிழகத்தில் கடும் போட்டியுள்ளது.புதிதாக பணியில் சேர்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள். ஓராண்டு நிறைவு பெற்றப்பிறகுதான் வேறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கூட இடமாறுதல் பெறமுடியும். மூன்றாண்டுகள் கிராமப்புற சேவையை முடித்தவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்புத் தரப்படுகிறது. இவ்வாண்டு அது இரண்டாண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.இது கிராமப்புற சேவை யை ஊக்குவிக்கும்.இதுபோன்று ஏனைய மாநிலங்களும் செய்யலாம்.

கிராமப்புற சேவைவையை முடித்தால் முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என ஆசைவார்த்தை காட்டப்படுகிறது.ஆனால் அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இரண்டாண்டு சேவையை முடித்தவுடனேயே மருத்துவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கப்படும் ,ஆண்டொண்றிற்கு 2 மதிப்பெண்கள் வீதம் 4 மதிப்பெண்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இதனால் பல ஆண்டுகளாக இருந்த காலிப்பணியிடங்கள் எல்லாம் நிரம்பின.
அரசின் உத்தரவை நம்பி பணியில் சேர்ந்த அவர்கள் இரண்டாண்டு சேவையை முடித்தப் பின்னரும் கூட முதுநிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க முடியவில்லை. தற்காலிக அடிப்படையில் அவர்களை நியமித்த அரசு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வை உடனடியாக வைத்து பணிவரன் முறை வழங்காததே இதற்குக் காரணம். இதே போல் காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய 1500 ஒப்பந்த டாக்டர்களும் 3 ஆண்டு கால அரசுப்பணிக்குப் பிறகு கூட முதுநிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க முடியவில்லை..டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வை உடனடியாக வைக்காததே இதற்குக் காரணம்.பணியைச் செய்தாலும் உரிய பலனை பெற முடியவில்லை. நமது மருத்துவத்துறை குளறுபடிகளே இதற்கெல்லாம் காரணம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய தொகுப்பில் 3000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. மத்திய அரசு மருத்துவர்களுக் குக்கூட இத்தொகுப்பிலோ,மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்களிலோ இட ஒதுக்கீடு இல்லை.மத்திய-மாநில அரசு மருத்துவமனைகளில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கினால் அரசுப்பணியில் கிராமப்புற சேவை செய்ய மருத்துவரகள் முன்வருவார்கள்.சேவை செய்யும் மருத்துவர்களுக்கு எதையும் செய்ய முன்வராத டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்டாய சேவையைப்பற்றி பேசுவது நகைப்புக்குரியது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள ரயில்வே,ஈ.எஸ்.ஐ,மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வழங்கி வந்த முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்துவிட்டது.இது சரியல்ல.


தமிழகத்தில் உள்ள நடைமுறையை பிறமாநிலங்களும் கடைபிடிக்கலாம்.இங் குள்ள குறைபாடுகளும் சரி செய்யப்பட வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கப்படுகி றது.இதை மாற்றவேண்டும். டாக்டர்கள் பணிநியமனத்திற்கென தனி வாரியம் அமைத்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தி நிரந்தர அடிப்படையில் மருத்துவர்களை நியமித்தால் இக்குறைபாட் டையும் களைய முடியும். மலைப்பகுதிகள்,பாலைவனம்,மற்றும் மிகவும் கடினமான பிரதேசங்களில் பணிபுரியம் டாக்டர்களுக்கு கூடுதல் ஊதியத்துடன், இதர வசதிகளும் வழங்கிடவேண்டும்.இதுபோன்ற பகுதிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஓய்வு பெற்ற அனுபவமுள்ள மருத்துவர்களை நியமிக்கலாம்.கிராமப்புற மருத்துவ மனைகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் பணியில் சேர தயங்கினால் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு போக்க வேண்டும்.பணிநேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டாய சேவை திட்டத்தால் அனுபவமில் லாத டாக்டர்களே தொடர்ந்து சாதா ரண மக்களுக்குக் கிடைப்பார்கள் .இதனால் மக்களுக்கும் பெரிய பயனில்லை..

கிராமப்புற மக்களைப்பற்றி அரசுக்கு உண்மையில் அக்கறை இல்லை.கிராமப்புற மக்கள் நலனுக்காக கட்டாய சேவை எனக்கூறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ மனைகளை தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்காக வழங்கிட முயல்வது ஏன்?நோயாளி நலச்சங்கங்கள் மூலம் கிராமப்புற அரசு மருத்துவ மனைகளைக்கூட தனியார் மயமாக்குவது ஏன்? அரச மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் பரிசோதனைகளுக்கும்-சிகிச்சைகளுக்கும் கட்டணங்கள் வசூலிப்பது ஏன்? உலகவங்கியின் நிர்பந்தம்தானே இதற்குக் காரணம்.இல்லை என்று மறுக்க முடியுமா?

இன்று நமக்கு 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவை உலக சுற்றுலாமையமாக மாற்றுவதாலும்,நகர்புற கார்ப்பரேட் மருத்துவ மனைகளை ஊக்கப்படுத்துவதாலும்,அரசு மருத்துவமனைகளை விட கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஊதியம் அதிகம் என்பதாலும் இளம் டாக்டர்கள் கிராமப்புறங் களுக்குப் போகத்தயங்குகின்றனர். இதற்கும் மத்திய அரசின் தவறான நலவாழ்வுக் கொள்கையேக் காரணம்.எனவே இக்குறைபாடு போக்கப்படவேண்டும்.

மக்கள் நல் வாழ்வுத் துறைக்கு அரசால் தற்பொழுது ஒதுக்கப்படுகிற நிதி உள்நாட்டு மொத்த உற்பத்தியியில் 1 விழுக்காடு தான.இது 5 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக 250 மருத்தவக்கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.


பல்வேறு வசதி வாய்ப்புகளில் கிராமப்புற- நகர்புற ஏற்றத்தாழ்வுகளைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல் கட்டாய கிராமப்புற சேவை என்ற பெயரில் இளம் டாக்டர்களை துன்புறுத்தல் கூடாது.அமைச்சர் அன்புமணி உணர்வாரா?

---------------------------------


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.11.08

இதழ்-செய்தி


இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் இன்று தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண வாக்குமூலம் இது.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையே அவரது மரண வாக்குமூலமாய்…

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும்.

தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்... தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா'னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.
இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்... போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.
அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.
ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது.
ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.
தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்?

நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத் தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி


















Photos taken at KAP VISHSWANATHAM GOVT MEDICAL COLLEGE TRICHY on 30-03-2007 during the demonstration pressing 27 % OBC reservation


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY


சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்


(பதிவு எண்: 322/2004)


# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43


தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845


தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776


மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com


இணையதளம்: www.daseindia.org


தேதி :28.11.08


இதழ்-செய்தி



இப்படிக்கு,


[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]


பொதுச் செயலாளர்


சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers