Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43 தொலைபேசி : 044-22642561 தொலைநகல் : 044-22642562 கைபேசி : 99406 64343
மின்அஞ்சல்:daseindia@gmail.com,dasetn@yahoo.com
இணையதளம் www.daseindia.org
________________________________________________________________________________
இதழ்ச் செய்தி தேதி :22.2.09

தற்காலிக மருத்துவர்களுக்கு உடனடியாக சிறப்பு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி பணிவரன்முறை வழங்கிடுக.

டாக்டர்கள் சங்கப் பொதுக்குழு வலியுறுத்தல்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிறு (22.02.09) பிற்பகல் சென்னை எழும்பூர் பாந்தியன்
சாலையில் உள்ள இக்சா-ஜெ.ஜெ -அரங்கில் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமையில் நடைபெற்றது. வேலை அறிக்கையை மாநிலப் பொ துச் செயலாளர் டாக்டர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத்தும்,நிதிநிலை அறிக்கையை பொருளாளர் டாக்டர் தி.மோகனும் தாக்கல் செய்தனர். மாநில நிர்வாகிகள் டாக்டர்.பி.துரை,ஆர்.சுந்தர்,ஏ.அருள்நம்பி,கு.முத்துக்குமார், வி.ஜீவானந்தம், ஏ.ஆர். சாந்தி,சிவக்குமரன்,சுகன்யா,திருவாரூர் சந்திரசேகர் உள்ளிட்டோர் தீர்மா னங்களை முன்மொழிந்து உரையாற்றினர்.இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து மருத்துவர்களும்,மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

1.தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வை நடத்தி பணிவரன்முறை வழங்கிட வேண்டும்.

2.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வு மூலம் பணி நிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன் முறை வழங்கு!

3.மத்திய அரசுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்குவதோடு,விருப்ப ஓய்வு பெற விரும்பும் மருத்துவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்கிட வேண்டும்.

4.டாக்டர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் பணிநியமனம் செய்வதை கை விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்திடவேண்டும்.இதற்கென தனி வாரியம் அமைத்திடவேண்டும்.

5.டி.என்.பி.எஸ்.சி மூலம் பணி அமர்த்தப் பட்டவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயிலாம் என்ற விதிமுறையை நீக்கி விட்டு , எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்கவேண்டும்.

6.நீலகிரி மாவட்டத்தில் ஓராண்டு சேவை முடித்த உடனேயே அரசு டாக்டர் களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.

7.மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும்,ஈ.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவக்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

8.முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதோடு, ஆன் -லைன் கவுன்சிலிங் வசதியை ஏற்படுத்திட வேண்டும்.நுழைவுத் தேர்வு முடிந்த உடன் விடைத்தாளின் கார்பன் நகலை தேர்வு எழுதியவருக்கு வழங்குவதோடு, அன்று மாலையே இணையதளத்தில் சரியான விடைகள் அடங்கிய ஆன்சர் கீயை (Answer key) வெளியிட வேண்டும்.

9.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குப் பிறகு கட்டாயச் சேவையில் ஈடுபடுத்துவதை கைவிடுவதோடு,மத்திய அரசின் கட்டாய சேவை திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது.நிரந்தர அடிப்படையில் மட்டுமே டாக்டர்களை பணி நியமனம் செய்திட வேண்டும்.

10.எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்வுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்வதோடு,பயிற்சி மருத்துவர்கள் , பட்டய மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.

11.எம்.எம்.சி,கே.எம்.சி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவியரின் விடுதிகளின் வசதியை மேம்படுத்திட வேண்டும்.

12.தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்டணங்களை ரத்து செய்திட வேண்டும்.

13.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்வி-விடுதி-தேர்வுக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.

14.மருத்துவ மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் லேப்-டாப் வழங்குவதோடு,மருத்துவக் கல்லூரிகளின் நூல்நிலையங்கள் அனைத்திலும் இன்டர்நெட் வசதி செய்துகொடுத்திட வேண்டும்.

15.நோயாளிகள் நலச்சங்கங்களுக்கு நிதி திரட்ட டாக்டர்களை கட்டாயப்படுத்துவதை கைவிடவேண்டும்.

16.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்குவதோடு மொபைல் கிளினிக் மருத்துவ ஊர்திகளுக்கு நிரந்தர ஓட்டுனர்களை யும்,மருத்துவ ஊழியர்களையும் நியமிக்கவேண்டும்.போதிய எரிபொருளையும் வாகனங்களுக்கு வழங்கிட வேண்டும்.

17.இரத்த சேமிப்பு வசதி,ஆம்புலன்ஸ் வசதி போன்ற வசதிகளும், மகப் பேறு-மயக்க மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. அவசர அறுவை சிகிச்சைக்கு வசதிகளற்ற இத்தகு நிலையங்களில் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால்,பேறுகாலத்தில் தாய் மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பது அதிகரிக்கிறது.கர்ப்பப்பை கிழிதல்,இரங்கிவிடுதல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன. மூளை-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதை கட்டாயப்படுத்தும் போக்கை கைவிடவேண்டும்.

18.எல்லா வசதிகளும் உள்ள பாதுகாப்பான மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்கப்படுத்துவதோடு,பிரசவம் பார்த்துக் கொள்வதற்கான மருத்துவனைகளை தெரிவு செய்திட தாய்மார்களுக்கு உள்ள உரிமையை பறிக்கக் கூடாது.

19.தமிழக அரசின் பட்ஜெட்டில் ஆண்டு வறுமானம் 24 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள 1 கோடி குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை பயனடையும் மருத்துவக் காப்பீடு திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 200 கோடி வரும் ஆண்டில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா,கனடா,சிலி,பெரு போன்ற நாடுகளில் தோல்வியடைந்த இத்திட்டத்தை உலக வங்கி தற்பொழுது மத்திய,மாநில அரசுகளைப் பயன்படுத்தி நம் மீதும் திணிக்கிறது.இதனால் உயிர்காக்கும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை படிப்படியாக தனியார் மயமாகிவிடும்.இத்திட்டத்தின் மூலம் சாதாரண மக்கள் 1.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் இதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை செய்து கொள்ள முடியாது.தனியார் மருத்துவமனைகளில் உள்ள அதிகமான கட்டணங்களும், காப்பீட்டு நிறுவனங்கள் போடும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ஏழை மக்களுக்கு பெரும் தடையாக அமையும். சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் உதவுவதில்லை.எனவே, ஏழை மக்களை தனியார் மருத்துவமனைகளை நோக்கி இழுக்கும் தூண்டில் புழுபோல்தான் இத்திட்டம் அமையும்.தனியார் மருத்துவமனைகளும், நலக்காப்பீட்டு நிறுவனங்களுமே இத்திட்டத்தால் லாபமடையும்.எனவே இத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
நலக்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உயிர்காக்கும் உயர் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏழை மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அரசே நேரடியாக உதவலாம்.இடைத்தரகர்களின் முறைகேடுகளை இதன் மூலம் தவிர்க்க லாம்.மேலும் ஆண்டுதோறும் இதற்காக செலவழிக்கூடிய நிதியை கொண்டே ஒவ்வொரு ஆண்டும் ஓர் உயர் சிறப்பு மருத்துவ மனையை அரசே தொடங்கிட முடியும்.அதில் இலவசமாக ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங் கிட முடியும்.ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துக்கல்லூரி மருத்துவமனை களையும் தரம் உயர்த்தலாம்,முழுமையாகப் பயன்படுத்தலாம்.அமைப்புசாரா தொழிலார்களுக்கு அரசே கட்டணம் செலுத்தி ஈ.எஸ்.ஐ திட்டத்தை நடை முறைப் படுத்தலாம்.அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அனைத்துப் பரிசோதனைகளையும், சிகிச்சைக ளையும் இலவசமாக்கலாம்.கட்டண வார்டுகளை ரத்து செய்து அந்தப் படுக்கை
களையும் ஏழை நோயாளிகளுக்கு வழங்கலாம்.இவற்றையெல்லாம் செய்யாமல் ஏழைமக்களுக்கு நலக்காப்பீடு என்பது ஒரு ஏமாற்று வேலை. தனியார் மருத்துவமனைகளையும்,தனியார் நலக்காப்பீட்டு நிறுவனங்களையும் ஊக்கப் படுத்தும் வேலை என்பது தான் உண்மை.எனவே இத்திட்டத்தை கைவிட்டு மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என இப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

20.இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் கட்டாயச் சேவைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதோடு, அரசுமருத்துவமனைகளை தனியார்மயமாக்குவதையும் ,வியாபாரமயமாக்குவதையும் கைவிட வேண்டும்.

21.மூடப்பட்டுள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை மீண்டும் திறந்திடவேண்டும்.

22.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு (ALL INDIA QUOTA) முறையை ரத்து செய்திட வேண்டும். இம் முறை நீடிக்கும் வரையில் அதில் மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கும், ஈ.எஸ்.ஐ, ரயில்வே மற்றும் பொதுத்துறை மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

23.இலங்கையில் போரை நிறுத்திடவும்,பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி.

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers