Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :25.05.08
இதழ்-செய்தி


மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடும் திட்டம். தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செய்யாறு சுகாதார மாவட்டப் பொதுக்குழு தீர்மானம்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செய்யாறு சுகாதார மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் மேஜர் கே.சிவஞானம் தலைமையில் செய்யாறில் 25.5.08 மாலை நடைபெற்றது.டாக்டர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினார்.கூட் டத்தில் டாக்டர்கள் விஜயராகவன,செல்லதுறை,அருளானந்தன்,தேவிப்பிரியா உட்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர் .டாக்டர் சகுந்தலா நன்றி நவின்றார். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகள் மருத்துவர்கள் முன்னிலையில் போடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது..இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுத லாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளை போடவேண்டும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகளும்,ஜீப்களும் வழங்க வேண்டும் .வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் தொடங்கவேண்டும்.

அரசுப்பணியாளர்களுக்கான நலக்காப்பீட்டுத்திட்டத்தை ஸ்டார்கெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வழங் குவதை கைவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு டாக் டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து தற்பொ ழுது காலமுறை ஊதியம் பெற்றுவரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத் துவக் கல்வி யில் சேர வழிகாண வேண்டும் . டாக்டர்களின் உயிர்- உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க ஆந்திர அரசு போல் சட்டம் கொண்டு வரவேண்டும். 50 வயதுக்குமேல் முதுநிலைமருத் துவக்கல்வி பயில தடை கூடாது. தற்காலிக மாக பணியாற்றி வரும் முது நிலை மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவ நிர்வாக அதிகாரிகளுக்கு கன்ஃப்பர்டு அய்.ஏ.எஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்.தலைவர்டாக்டர் மேஜர் கே.சிவஞானம்,துணைத் தலைவர்கள் டாக்டர்கள் விஜயராகவன,சகுந்தலா செயலாளர் டாக்டர் சரேஷ், ,துணை செயலாளர்கள் பிரியா,சன்முகராஜா, பொருளாளர் அருளானந்தன்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers