Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :13.05.08
இதழ்-செய்தி

தனியார் மருத்துவக்கல்லூரி கல்வி கட்டண பிரச்சனை- முதல்வர் தலையிட வேண்டுகோள்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.இதனால் ஏழை-எளிய மாணவர்கள் அரசு ஒதுக் கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ,அரசுப் பணியாளர்களின் குழந்தைகளும் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் படிப்பைத் தொடரவேண்டியுள்ளது.அரசுக்கான இடங்களை தனி யார் கல்லூரிகளிலிருந்து பெறமுடிந்த போதிலும், கல்விக் கட்டண உயர்வால் அவற்றின் பலன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கு கிடைக்கவில்லை.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.இது சமூக நீதிக்கு எதிரானது.எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிடவேண்டும். கல்விக் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கு முன்பாகவே கட்டணத்தை அறிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலாக வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் . தி.மு.க தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளபடி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். ஏற்கனவே மஹாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.எனவே சமூக நீதியை காத்திட தமிழக அரசும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திட வேண்டும்.

ஈரோடுமாவட்டம் பெருந்துறையில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன(ஐ.ஆர்.டி) மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களை அரசு மருத்துவர்களாகக் கருதவேண்டும், அவர்களுக்கு அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்து வக்கல்வி பயில இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அங்கு பயிலும் மாணவர்களையும் அரசு மருத்துவ மாணவர்களாகக் கருதி அரசு மருத் துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அளவிற்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers