Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :18.05.08
இதழ்-செய்தி


தடுப்பூசி மரணங்கள்- உண்மையான காரணத்தை கண்டறிந்து பரிகாரம் காண ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்திட வேண்டும். மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

கடந்த மாதம் 23 ஆம் தேதி தட்டம்மை தடுப்பூசி போட்டதில் 4 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலியானதற்குக் கரைப்பானை மாற்றி போட்டதும் அதனால் ஏற்பட்ட நச்சுக்கலப்பும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.எனவே இது குறித்து நேர்மையான முறையில் விசா ரணை நடத்த வேண்டும்.இந்தத் தடுப்பூசி மரணங்கள் அரசியலாக்கப்படுவது வருந்தத்தக்கது.

மத்திய -மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டு பிரச்ச னையை திசைதிருப்பக்கூடாது. தடுப்பூசி மரணங்களுக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டால் தான் தடுப்பூசியை பற்றிய அச்சம் மக்கள் மனதிலிருந்து நீங்கும்.எனவே,ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை யில் ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கிய குழுவை அமை த்திட வேண்டும்.

எல்லோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவது எவ்வளவு முக்கிய மோ அதேபோல் பாதுகாப்பாக வழங்குவதும் முக்கியம்.எனவே பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கையுடன் போடும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பாராட்டத்தக்கது. இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதில் உள்ள பிரச்ச னைகளை களைவதற்கு போர்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் . தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகள் மற்றும் தாய்மார் கள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட அரசின் இத்திட்டத்தை சில அமைப்புகள் சுய நல நோக்கோடு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.


தரமுள்ள ஊசிக்குழல்களை மட்டுமே தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கவேண்டும். தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கட்டாய சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைவில் உத்தர விடப்படும் என அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள் ளது வருந்தத்தக்கது . இது கிராமப்புற மாணவர்களுக்கும் ,பெண்களுக்கும், சமூக நீதிக்கும் , தொழிலாளர் நலச்சட்டங்களுக்கும் எதிரானது . கட்டாய சேவை என்ற பெயரில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் பணியிடங்களை ஒழித்துக் கட்ட அவர் முயன்றால் அதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு,
உண்மையுள்ள,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers