Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site


DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
இதழ்-செய்தி
தேதி :29.10.08

சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிடத்தயார். தமிழக மருத்துவக்குழு போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத்தரவேண்டும்.மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உதவிட வேண்டும்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்துள்ளது.குறிப்பாக வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்ப டுகின் றனர்.கிளிநொச்சி மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவ மனைகளில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகள் மருத்துவமனை வளாகங் களில் தரையில் படுத்திடும் அவலநிலை உள்ளது. மலேரியா,வாந்தி-பேதி,விஷக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளிவருகின்றன. பாம்புகடியால் ஏராளமானோர் இறந்துள்ளனர்.தொற்றுநோய்களும்,மழைக் காலத்தால் ஏற்படும் நோய்களும் அதிகரித்துள்ளது.ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.குழந்தைகளுக்கும் பேறுகால தாய்மார்களுக்கும் தடுப்பூசிகளைக் கூட போடமுடியவில்லை. போதிய மருந்துப்பொருட்களும்,மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அகதிகளாக உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை மனித உரிமையான மருத்துவ வசதிகளின்றி அவதிப்படும் தமிழர்களுக்கு மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்கிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள்,மருத்துவக்குழு தயாராக உள்ளது.தமிழக மருத்துவக்குழு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவ உதவி வழங்கிட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தர தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் முன்வரவேண்டும்.தமிழக அரசும் உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தனது செல்வாக்கையும் முழுமையாகப் பயன்படுத்தி உதவிகளை வழங்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers